Skip to main content

கிராம்பு

மருத்துவக் குணங்கள்:
1. கிராம்பில் கார்போ ஹைட்ரேட்,
ஈரப்பதம், புரதம், வாலடைல்
எண்ணெய், கொழுப்பு,
நார்ப்பொருள், மினரல்,
ஹைட்ரோகுளோரிக் அமிலச்
சாம்பல்கள், கால்சியம்,
பாஸ்பரஸ், தயமின்,
ரிபோ பிளேவின், நயாசின்,
வைட்டமின் சி மற்றும் ஏ
போன்றவை உள்ளன. கிராம்பின்
மொட்டு, இலை,தண்டு
போன்றவற்றிலிருந்து எண்ணெய்
எடுக்கப்படுகிறது.
2. கிராம்பில் பலவித மருத்துவ
குணங்கள் உள்ளன.
இவை பெரும்பாலும்
ஊக்கு வித்தல், தூண்டுதல்
உண்டாக்கும் பொருளாக
உள்ளது. பல வலிகளைப்
போக்குவதுடன் வயிற்றுப்
பொருமல், குதவழிக்
போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த
நிவாரணி.
3. உடலைப் பருமடையச்
செய்யவும்,
வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு
உதவவும்,
சூட்டை சமப்படுத்தவும், ரத்த
ஓட்டத்தை முறைப்படுத்தவும்
இது பலன் அளிக்கிறது.
4. ஜீரண உறுப்புகளில் சுரக்கும்
நொதிகளை கிராம்பு
ஊக்குவிக்கிறது. இதனால்
ஜீரணக்கோளாறுகள்
நீங்குகின்றன.
5. கிராம்புப்
பொடியை வறுத்து அரை கிராம்
தேனில் குழைத்து சாப்பிட்டால்
வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள
விறைக்கப் பண்ணும்
ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில
உறுப்புகளை விரைப்படையச்
செய்து வாந்தியைத்
தடுக்கிறது.
6. நான்கு கிராம்
கிராம்பை மூன்று லிட்டர்
தண்ணீரில்
போட்டு அரை பங்காக
சுண்டும் அளவிற்கு கொதிக்க
வைத்துப் பருகினால்
காலரா குணமடையும்.
7. சிறிது சமையல் உப்புடன்
கிராம்பை சாப்பிட்டால்
தொண்டை எரிச்சல்,
கரகரப்பு நீங்கி தொண்டை
சரியாகும்.
தொண்டை அடைப்பால்
ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க,
சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
8. கிராம்பு எண்ணெய்
மூன்று துளியுடன் தேன்
மற்றும் வெள்ளைப் பூண்டுச்
சாறு சேர்த்து படுக்கைக்குப்
போகும் முன்பு சாப்பிட
ஆஸ்துமாவால் ஏற்படும்
சுவாசக் குழல்
அழற்சி சரியாகும்.
9. முப்பது மில்லி நீரில்
ஆறு கிராம்புகளைப்
போட்டு கொதிக்க
வைத்து அந்தக் கசாயத்தில்
தேன் கலந்து குடித்தால்
ஆஸ்துமா கட்டுப்படும்.
10. கிராம்புப்
பொடியை பற்பொடியுடன்
கலந்து பயன்படுத்தி வர, வாய்
நாற்றம், ஈறு வீக்கம்,
பல்வலி ஆகியவை குணமாகும்.
கிராம்பு எண்ணெயை
பாதிக்கப்பட்ட ஈறுகளில்
தடவிவர குணம் கிடைக்கும்.
11. 3-5 துளி நல்லெண்ணெயில்
ஒரு கிராம்பை சூடு காட்டி
அந்த எண்ணெயை வலியுள்ள
காதில் இட்டால் சுகம்
கிடைக்கும்.
12. தசைப்பிடிப்புள்ள இடத்தில்
கிராம்பு எண் ணெயைத்
தடவி வர குணம் கிடைக்கும்.
13. கிராம்பு மற்றும்
உப்பை பசும்பாலில்
அரைத்து அந்தப் பசையைத்
தடவினால்
தலைவலி பறந்துவிடும்.
தலையிலுள்ள
நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால்
தலைபாரம் குறைந்து குணம்
கிடைக்கிறது.
14. கண் இமைகளில் ஏற்படக்கூடிய
அழற்சிகளை போக்க
கிராம்பை நீரில் உரசி அந்த
நீரைப் பயன்படுத்தினால் குணம்
கிடைக்கும்.
15. சமையலுக்கும், கறிகளுக்குச்
சுவையூட்டவும்,
கறி மசாலா வகைகள்
தயாரிக்கவும்
கிராம்பு முக்கியம். வாசனைத்
தயாரிப்பு, சோப்புத்
தயாரிப்பிலும்
இது பயன்படுகிறது.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு