Skip to main content

உலர் திராட்சை


உலர் திராட்சை :

திராட்சையில் நிறைய வகைகள்
உள்ளது. அனைவரும்
விரும்பி உண்ணக்கூடிய
திராட்சை உலர் திராட்சை தான். இந்த
பழங்கள் உலர வைத்து எடுப்பதால்
உலர் திராட்சை பழம் என்கிறோம்.
உலர் திராட்சையில் வைட்டமின்
மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம்
நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ்,
பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2,
பி3, பி6, பி12 அமினோ அமிலம்
இரும்புச்சத்து பொட்டாசியம்,
கால்சியம் போன்ற
அனைத்து சத்துகளும் இதில் உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு உலர்
திராட்சை சிறந்ததாகும். இதில்
கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால்
எலும்புகள் உறுதிபெறவும் பற்கள்
வலுபெறவும் உடல்
வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது.
குழந்தைகளுக்கு தேகபுஷ்டி
வேண்டுமென்றால் தினமும்
இரவு தூங்கச்
செல்வதற்கு முன்பு பாலில்
போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள்.
இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல்
பிரச்சனை தீரும்.
மலச்சிக்கல் பிரச்சனையால்
அவதிபடும்
முதியோர்களுக்கு சிறந்தது. உல்
திராட்சை தாமிர
சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில்
உள்ள சிவப்பணுக்கிளின்
எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த
பலத்தை வாயில் போட்டு சாப்பிடும்
போது எலும்பு மஞ்ஜைகள்
வலுபெறும். மஞ்சள் காமாலை நோய்
உள்ளவர்கள் தினமும் காலை,
மாலை வேளையில்
சாப்பிட்டு வந்தால் மஞ்சள்
காமாலை குணமாகும்.
தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால்
காய்ச்சும் போது மிளகுதூள், உல்
திராட்சையை போட்டு பருகலாம்.
நாவறட்சிக்கு சிறந்தது உலர்
திராட்சை. உலர் திராட்சையுடன்
மிளகு சேர்த்து கஷாயம்
செய்து சாப்பிட்டால்
நாவறட்சி எளிதில் குணமாகும். உடல்
வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு,
பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும்
சேர்த்து தண்ணீர்
விட்டு காய்ச்சி பருகினால் உடல்
வலி தீரும்.
பித்தத்திற்கும் இது சிறந்த மருந்து.
கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர்
திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால்
ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
இந்தப்பழத்தை பாலில் போட்டும்
வெறுமனையாக சாப்பிட்டும் வந்தால்
இதய துடிப்பு சீராக செயல்படும்.
தினமும் ஒரு பத்து உலர்
திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு
மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள்
உங்களுக்கே பல மாற்றங்கள்
தெரியும்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு