வெந்தயம்
சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால்
என்பது நமது மக்களிடையே காணப்படும்
சில பொதுவான நோய்களாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும்
சிகிச்சை முறைகளுடன், வெந்தயம்
உட்கொள்வது, உறுதுணையாய்
செயல்படுகிறது.
* ஆரம்பக்காலத்தில், 25 கிராம்
வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை,
ஒரு வேலைக்கு 12.5 கிராம்
(தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற
அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய
காலை மற்றும்
இரவு உணவுகளோடு எடுத்தும்
கொள்ளலாம்
* வெந்தயத்தை இரவு முழுவதும்
தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக
இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும்
கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள்
முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட
விதைகள் அல்லது பொடியாக
இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை,
சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா,
தயிர், பருப்பு மற்றும்
காய்கறி கூட்டுகள் செய்யும்
போது அவற்றுடன்
இணைந்து பயன்படுத்தலாம்.
இப்படி செய்யும்போது விதைகளின்
கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.
* இவைகளை தயார்
செய்யும்போது உண்பவரின்
ருசிப்புத்தன்மைக்கேற்ப
உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து
தயார் செய்யலாம்.
* இரத்தத்தில் சர்க்கரை மற்றும்
கொலஸ்டிரால்
அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை
உட்கொள்ளலாம்.
* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன்
தினமும் நடைபயிற்ச்சி போன்ற
உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும்
அவசியம். உடல் எடையை குறைப்பதின்
மூலம், இன்சுலின் ஹார்மோனின்
செயல்களை அதிகரிக்க செய்யும்.
* இவ்விதைகளை உட்கொள்ளும்
நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில்
வயிற்றுபோக்கு மற்றும் குடலில்
வாயு உற்பத்தியாவது அதிகமாக
காணப்படும்.
* வெந்தயத்தை உணவாக
பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட
மற்ற சர்க்கரைநோய்
சிகிச்சை முறைகளையும் பின்பற்ற
வேண்டும்।
இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை
வியாதிக்கான மருந்துகளின்
அளவு குறையலாம்.
*ஆயினும் உங்கள் மருத்துவர்
மாத்திரமே நோயின்
தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள
வேண்டிய மருந்தின்
அளவுகளை தீர்மானிக்க முடியும்.
சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும்
உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக
மருத்துவ
ஆலோசனையை நாடுவது அவசியம்.
Comments
Post a Comment