Skip to main content

வெந்தயம்

வெந்தயம்

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால்
என்பது நமது மக்களிடையே காணப்படும்
சில பொதுவான நோய்களாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும்
சிகிச்சை முறைகளுடன், வெந்தயம்
உட்கொள்வது, உறுதுணையாய்
செயல்படுகிறது.
* ஆரம்பக்காலத்தில், 25 கிராம்
வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை,
ஒரு வேலைக்கு 12.5 கிராம்
(தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற
அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய
காலை மற்றும்
இரவு உணவுகளோடு எடுத்தும்
கொள்ளலாம்
* வெந்தயத்தை இரவு முழுவதும்
தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக
இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும்
கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள்
முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட
விதைகள் அல்லது பொடியாக
இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை,
சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா,
தயிர், பருப்பு மற்றும்
காய்கறி கூட்டுகள் செய்யும்
போது அவற்றுடன்
இணைந்து பயன்படுத்தலாம்.
இப்படி செய்யும்போது விதைகளின்
கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.
* இவைகளை தயார்
செய்யும்போது உண்பவரின்
ருசிப்புத்தன்மைக்கேற்ப
உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து
தயார் செய்யலாம்.
* இரத்தத்தில் சர்க்கரை மற்றும்
கொலஸ்டிரால்
அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை
உட்கொள்ளலாம்.
* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன்
தினமும் நடைபயிற்ச்சி போன்ற
உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும்
அவசியம். உடல் எடையை குறைப்பதின்
மூலம், இன்சுலின் ஹார்மோனின்
செயல்களை அதிகரிக்க செய்யும்.
* இவ்விதைகளை உட்கொள்ளும்
நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில்
வயிற்றுபோக்கு மற்றும் குடலில்
வாயு உற்பத்தியாவது அதிகமாக
காணப்படும்.
* வெந்தயத்தை உணவாக
பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட
மற்ற சர்க்கரைநோய்
சிகிச்சை முறைகளையும் பின்பற்ற
வேண்டும்।
இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை
வியாதிக்கான மருந்துகளின்
அளவு குறையலாம்.
*ஆயினும் உங்கள் மருத்துவர்
மாத்திரமே நோயின்
தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள
வேண்டிய மருந்தின்
அளவுகளை தீர்மானிக்க முடியும்.
சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும்
உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக
மருத்துவ
ஆலோசனையை நாடுவது அவசியம்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு