கவிழ் தும்பை
குளிர்காலத்தில், உடலில் சீதத்தின்
தீவிரம் அதிகமாக காணப்படுவதால்,
நுண்ணிய ரத்தக்குழல்களும்,
தசைகளும், தசை நார்களும் சுருங்கி,
சற்று இறுக்கத்துடன்
காணப்படுகின்றன.
* நம் உடல்
பாகங்களை அசைத்து நாம் செய்யும்
சில
பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக
சுருங்கி, விரியாததால் சில
இடங்களில் தசைகள்
இறுக்கமடைகின்றன.
* கழுத்து, தோள்பட்டை, விலா,
முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும்
கணுக்கால் பகுதிகளில் உள்ள
எலும்புகளில் ஏற்படும் தேய்மானம்,
சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும்,
தசைப்பகுதிகளில் மற்றும்
எலும்பு இணைப்பு பகுதிகளில்
அடிபடுதலால் தோன்றும்
வீக்கத்தாலும் அந்த இடங்களில்
வலி ஏற்படுகிறது.
* இது பெரும்பாலும் குளிர்காலத்தில்
அதிகரித்து காணப்படுகிறது.
இவ்வாறு உடலில் தோன்றும்
பலவகையான
தசை வலிகளை நீக்கி உடலை
சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
அற்புத மூலிகை கவிழ்தும்பை.
* “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற
தாவரவியல் பெயர் கொண்ட
போரோஜினேசியே குடும்பத்தைச்
சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள்,
“கழுதை தும்பை’ என
வேறு பெயராலும்
அழைக்கப்படுகின்றன. இதன்
இலைகள் நறுமணம் உடையவை.
* இலை மற்றும் வேரிலுள்ள
எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க்
அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன
தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின்
இயல்பான செயல்
பாட்டை ஊக்குவிக்கின்றன.
*
கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம்
செய்து, அனைத்து பாகங்களையும்
சிறு, சிறு துண்டுகளாக
வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில்
செடி பாகங்களை 500 மி.லி. நீரில்
கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக
சுண்டியபின்,
வடிகட்டி காலை மற்றும்
மாலை உணவுக்கு முன் குடித்துவர,
மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட
பகுதிகளில் தோன்றும் வலி மற்றும்
வீக்கம் நீங்கும்.
* கவிழ்தும்பை இலைகளை இடித்து
ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன்
ஐந்து சொட்டுகள்,
இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை
வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர,
மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான
வலியுள்ள இணைப்பு பகுதிகளில்
கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு
மைய அரைத்து, பசை போல்
செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம்
வற்றும்.
எந்த வலி வந்தாலும் கவிழ்
தும்பையை மறக்காதீங்க.
Comments
Post a Comment