Skip to main content

பீட்ரூட்

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!

* புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.*
மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக்
குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத்
தவிர்க்கும்.* கிட்னியில் சேர்ந்துள்ள
தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும்
கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய
நிறத்திற்காகவே இதனை அனைவரும்
விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில்
உள்ள கார்போஹைட்ரேட்ஸ்
சர்க்கரை துகள்களாக இருப்பதால்
இது விரைவில் ஜீரணமாகி நம்
ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7
விழுக்காடும், புரோட்டின் 17
விழுக்காடும், கொழுப்பு 0.1
விழுக்காடும், தாதுக்கள் 0.8
விழுக்காடும், நார்ச்சத்து 0.9
விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8
விழுக்காடும் உள்ளது. மற்றும்
கால்சியம் 18 மில்லி கிராமும்,
பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும்,
இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின்
சி 10 மில்லிகிராமும் மற்றும்
வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6
நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன்
சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின்,
ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும்
பீட்ரூட்டில் உள்ளன.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம்
உடலில், புதியதாக இரத்த அணுக்கள்
உருவாக துணை புரிகிறது. பச்சைக்
காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம்
பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக
அளவு உண்டும், இரத்தத்தின்
அளவு அதிகரிக்காமல் இருக்கும்
பட்சத்தில்
பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள்
உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல்
செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும்
சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட்
ஒரு சிறந்த டானிக். பித்தம்
அதிகமாகி அடிக்கடி பித்த
வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட்
ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும்
மற்ற கீரைகள் போல் சமையல்
செய்து சாப்பிட அல்சர், மஞ்சள்
காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச்சிக்கலினால்
துன்பப்படுபவர்களும், மூலக்
கோளாறினால் துன்பப்படுபவர்களும்
பீட்ரூட் சாறை தண்ணீருடன்
கலந்து அரை டம்ளர்,
இரவு படுக்கைக்கு முன் அருந்த
வேண்டும். பீட்ரூட்டை உணவில்
அடிக்கடி சேர்த்துக் கொண்டால்
கிட்னியில் கற்கள் உருவாவதைத்
தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல்
போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட்
ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக்
கலந்து தடவினால் பிரச்னையிலிருந்
து விடுபடலாம்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக்
கொண்டிருக்கும் நோயாளிகள்,
ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர்
பருகி வந்தால் புற்றுநோய்
பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப
நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும்
வல்லமை படைத்தது பீட்ரூட்.
பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது,
சிலருக்கு மட்டுமே பிடிக்கும்.
குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும்.
இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட
ஒன்றாகவே தெரிகிறது. ஆனால்
இதற்கென்று பிரத்யேக மருத்துவப்
பயன்கள் உண்டு.
1.
பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன்
கலந்து சாப்பிட்டு வர அல்சர்
குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன்
வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர
சிறுநீரகங்களும் பித்தப்பையும்
சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன்
படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில்
எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல்
தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்
தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல்
விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம்
மூலநோயை குணப்படுத்தும்.
6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும்.
இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட்
சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக்
கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக
எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர
இரத்தத்தில் சிவப்பணுக்கள்
உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில்
வினிகரைக் கலந்து சொறி, பொடுகு,
ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும்
குணமாகும்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு