Skip to main content

நுங்கு

நுங்கு

கோடை வெயில் கொளுத்திட்டிருக்கு.
வெயிலோட தாக்கத்தில
இருந்து தப்பிக்க குளிர்பானங்கள்,
பழங்கள், தர்பூசணி,
வெள்ளரி போன்றவற்றை சாப்பிட்டு வர்ற
இந்த நேரத்துல இயற்கையோட கொடையான
நுங்கு சீசனும் தொடங்கியிருக்கு. நாம
விரும்பி சாப்பிடற இந்த நுங்குல
ஏராளமான நன்மைகள் இருக்கு.
உடலுக்கு குளிர்ச்சிய தர்றதுல
முக்கிய பங்கு வகிக்கிது நுங்கு.
அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம்
நுங்கை சாப்பிட்டு வர உடல்
குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள
சிறு புண்களையும் ஆற்றும். கோடையின்
வெம்மையை கட்டுப்படுத்துவதில்
நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும்.
இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின்
பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால்
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
இளம் நுங்கினை அப்படியே சாப்பிட
வேண்டும். ஒருசிலர் மேல்தோல்
துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக
அதனை நீக்கிவிட்டு வெறும்
சதையை மட்டுமே சாப்பிடுவார்கள்.
இதனால் சத்துக்கள் முழுமையாக
கிடைக்க வாய்ப்பில்லை.
சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக
நேரமாகும் என்பதால் நசுக்கிக்
கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு,
பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே
இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.
பசியை தூண்டவல்ல இந்த
நுங்கு சீதபேதியை சரி செய்யும் குணம்
கொண்டது.
நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா
வேர்குரு மறையும். கால்சியம்,
வைட்டமின் பி, சி சத்துக்கள் நுங்குல
இருக்கு. குடல் புண்ணை ஆற்றும்
சக்தி உடையது. இதுபோன்று ஏராளமான
நன்மைகள் கொண்ட நுங்கை நாமும்
சாப்பிட்டு பயன்பெறலாமே.
நுங்கு சாப்பிடுபவர்கள் இளம்
நுங்கைதான் சாப்பிட வேண்டும்.
இது சுவையாக இருக்கும். முற்றிய
நிலையில் உள்ள நுங்கை சாப்பிட்டால்
சுவை குறைவாக இருப்பதோடு,
வயிற்றுவலி உண்டாக வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு