முட்டைகோஸ்:
நாம்
பொரியலுக்கு பயன்படுத்துவதில்
முட்டைகோஸ் முக்கிய
பங்கு வகிக்கிறது.
இலைக்காய்கறிகளில் ஒன்றான
முட்டைகோஸின் நன்மைகள்
பற்றி நாம் அதிகம்
தெரிந்திருப்பதில்லை.
முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு,
பச்சை மற்றும்
ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது.
இவை அனைத்தும் ஆரோக்கியம்
தரும் உணவுகளே. இதில்
பைட்டோ நியூட்ரியண்டுகள்
மற்றும் வைட்டமின்களான ஏ,
சி மற்றும் கே போன்ற
சத்துகளை கொண்டுள்ளது.
இவை உடலை தாக்கும் புற்றுநோய்,
இதயநோய், போன்றவற்றை தடுக்கும்.
இதில்
நார்சத்துகளை கொண்டுள்ளதால்
செரிமான பிரச்சனை மற்றும்
மலச்சிக்கல்
பிரச்சனைகளை சரிசெய்கிறது.
குறிப்பாக
முட்டைகோஸை சமைக்கும்
போது அளவுக்கு அதிகமாக
வேகவைத்து சாப்பிடக்கூடாது.
ஏனெனில் அதிகளவு வேகவைக்கும்
போது அதன் சத்துகள்
வெளியாகிவிடும்.
முட்டைகோஸில்
புற்றுநோயை எதிர்த்துப்
போராடும்
பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது.
எனவே இதனை சாப்பிட்டால்,
புற்றுநோயை ஏற்படுத்தும்
செல்கள் வளர்வதை முற்றிலும்
தடுக்கும். மேலும்
ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ்
சாப்பிட்டால், புற்றுநோய்
வளர்வதை தடுக்கலாம்
என்று கண்டறியப்பட்டுள்ளது.
அல்சரால் அவதிப்படுபவர்கள்,
முட்டைக்கோஸை ஜூஸ்
போட்டு சாப்பிட்டு வந்தால்,
அல்சரை விரைவில்
குணப்படுத்தலாம். ஏனெனில்
இதில் அல்சரை குணப்படுத்தும்,
குளுட்டமைல் அதிக அளவில்
நிறைந்துள்ளது.
இதில் உள்ள அதிகப்படியான
வைட்டமின் சி, நோய்
எதிர்ப்பு மண்டலத்தை
வலிமைப்படுத்தி, உடலை நோய்கள்
தாக்காதவாறு பாதுகாக்கும்.
முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன்
அதிக அளவில் இருப்பதால்,
அது கண்புரையை தடுக்கிறது.
எடையை குறைக்க நினைப்போர்,
தினமும் ஒரு கப் வேக வைத்த
முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ்
சூப் சாப்பிட்டால், உடல்
எடையை ஆரோக்கியமான முறையில்
குறைக்கலாம்.
பெண்களுக்கு மெனோபாஸ்
காலங்களில் உண்டாகும்
கால்சியம், பாஸ்பரஸ்
இழப்பை முட்டைகோஸ்
ஈடுசெய்யும்.
நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
நரம்புத் தளர்ச்சியைப்
போக்கும். தொற்று நோய்கள்
ஏற்படாமல் தடுக்கும்.
உடலுக்கு நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
. முட்டைகோஸை நீரில்
போட்டு சிறிது நேரம்
ஊறவைத்து அந்த நீரைக்
கொண்டு முகம் கழுவினால்
வறட்சியான சருமம்
பளபளப்படையும்.
எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.
இதில் சுண்ணாம்புச்சத்து
அதிகமிருப்பதால் எலும்புகள
கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்
Comments
Post a Comment