Skip to main content

முருங்கைக்காய்

முருங்கைக்காய்

அனைவரும் விரும்பிச் சாப்பிடும்
முருங்கைக்காயில்
எண்ணிலடங்கா பயன்கள்
இருக்கின்றன. ஆனால் நாம்
அறிந்திருப்பதோ சில
பயன்களை மட்டுமே.
பயன்களை அறிந்து காய்கறிகளை
சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம்
பார்க்க விருப்பது முருங்கைகாய்.

முருங்கைகாய்.
என்ன சத்துகள் இருக்கு:
தினமும்
முருங்கைக்காய் சாப்பிடுவதால்
கிடைக்கும் சத்துகள். பொதுவாக
முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும்
இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ,
சி இருக்கிறதை தெரிந்துகொள்ள
வேண்டும்.. மேலும் புரதம் 2.5
கிராம், கார்போஹைட்ரேட் 3.7
கிராம்,தண்ணீர் 86.9%,
கலோரி 26,ஃபைபர் 4.8
கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின்
ஏ 0.11 மிகி,வைட்டமின்
பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின்
பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின்
பி2 (ரிபோப்லாவின்) 0.07
மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக்
அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30
மில்லி கிராம்,மெக்னீசியம் 24
மில்லி கிராம் கொண்டுள்ளது.

யாருக்கு நல்லது :
குழந்தைகள்
முருங்கைக்காய்
விதைகளை சாப்பிட்டால்
மலக்குடல்களில் சேரும்
கிருமி பூச்சிகள் வெளியேறும்,
மலச்சிக்கலால் அவதி படுபவர்கள்,
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
சளி பிரச்சனை உள்ளவர்கள்,
ரத்தசோகை,வயிற்றில்
புழு பிரச்சனை உள்ளவர்கள்,
கணையம், கல்லீரலில் வீக்கம்
உள்ளவர்கள் சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல:
முதியவர்கள்,
இதய நோயாளிகள், மூட்டு நோய்
உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
ஏனெனில் வாயுப்
பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்:
நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம்
தரும். முருங்கைகாயை வாரத்தில்
இரண்டு முறை சாப்பிட்டு வந்தால்
வயிறு வலி குணமாகும் மேலும்
மூலம் தலைவலி, இரத்த நுகர்வு,
சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல்,
எரிவாயு பிரச்சினைகள் நீங்கும்
உடலில் வெப்பநிலை அதிகம்
கொண்டவர்கள் முருங்கைகாய்
சாப்பிட்டு வந்தால் உயர்
வெப்பநிலை குறையும்.
கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய
கண்டிப்பாக சாப்பிட வேண்டும்,
ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும்
பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய
பிரச்சனைகளை முருங்கைகாய்
நீக்குகிறது. பிரசவத்திற்கு பின்னர்
முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம்
தாய்க்கு பால் அதிகரிக்கும். சளியைப்
போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும்
வயிற்றுப் புழுக்களுக்கும்
எதிரானவை.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு