Skip to main content

செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்தியின் பூக்கள்
உடலுக்கு ஆரோக்கியம் தருவதில்
சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர்
அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம்
இரத்த அழுத்தம் குறைகிறது..
ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள்
கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல்
சேதத்தை எதிர்த்து போராடுகிறது.
இது இருமல், முடி உதிர்தல் போன்ற
சிகிச்சைக்கு உதவி புரிகிறது மேலும்
முடி அதிகமாக வேண்டும் என
விரும்புபவர்கள் செம்பருத்தியின்
எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர்
போன்று உபயோகப்படுத்தலாம்.
ஆரோக்கியமான
உடலுக்கு தேவையான
வெப்பநிலையை பராமரிக்க
உதவுகிறது-. இப்பூக்களில்
வைட்டமின் சி மற்றும் தாதுக்கள்
கொண்டுள்ளது. இதயம் மற்றும்
நரம்பு மண்டலத்துக்கு தேவையான
சுகாதார நலன்களை வழங்குகிறது.
எடை கட்டுபடுத்தும்
செயல்களை மேற்கொள்கிறது-.
நினைவாற்றலை மேம்படுத்தும்,
செரிமான பிரச்சனைக்கு தீர்வாகவும்
உள்ளது. நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஒரு கப் செம்பருத்தி பூவின் தேநீர்
கொழுப்பை குறைக்கிறது.
செம்பருத்திப் பூ இலை, பூ, வேர் என
அனைத்தும் மருத்துவத்
தன்மையுள்ளவை.
வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக்
குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள்
தினசரி 5 அல்லது 10 பூக்களின்
இதழ்களை சாப்பிட்டு வந்தால்
புண்கள் குணமாகும்.)
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல்
இருப்பவர்களுக்கும், வயது அதிகம்
ஆகியும் ருதுவாகாமல் இருக்கும்
பெண்களுக்கும்
செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.
செம்பருத்திப் பூவின்
இதழ்களை அரைத்து மோரில்
கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால்
வெகுவிரைவில் கருப்பையில் உள்ள
நோய்கள் குணமாகும்.
பூப்பெய்தாத பெண்களும்
பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக்
காலங்களில் ஏற்படும் உபாதைகளைக்
குறைக்கும். செம்பருத்திப்
பூவை நிழலில்
உலர்த்தி பொடி செய்து கசாயமாகக்
காய்ச்சி அருந்தி வந்தால்,
மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும்
அடிவயிற்று வலி, தலையிடி,
மயக்கம் போன்றவை குறையும்.
வெள்ளைப்படுதலைக் குணமாக்கும்.
செம்பருத்தியின் இதழ்களை கசாயம்
செய்து அருந்தி வந்தால்
வெள்ளைப்படுதல் குணமாகும்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு