Skip to main content

கற்றாழை

கற்றாழை

உஷ்ண வாயு தொடர்பான
பிணிகளை மிகவும் துரிதமாகவும்,
பூரணமாகவும் இது குணப்படுத்தும்
கற்றாழை எங்கும் காணக் கிடைக்க
கூடியது கற்றாழை.
கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய
நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல்,
மாதவிடாய் கோளாறுகள், உடல்
வெப்பம், உடல் காந்தல் போன்ற
பாதிப்புகளுக்கு, சோற்றுக்
கற்றாழை உள்ள சோறு போன்ற
கலவையை எடுத்து சுத்தமான நீரில்
அலசிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதற்குச் சமமான அளவில்
பனங்கற்கண்டினை அத்துடன்
சேர்த்து காலை,
மாலை இருவேளைகளிலும்
உண்டு வரவேண்டும்.
இதனால் உடல் உஷ்ணமும்,
எரிச்சலும் குறையும். வெயில்
காலத்தில் சிலருக்கு கண்களில்
எரிச்சல் உண்டாகி, கண்கள்
சிவந்து விடும். அப்போது,
கற்றாழையின்
ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப்
பகுதி வெளியே தெரியும்படி
இரண்டாகப் பிளந்து,
கண்களை மூடி கண்களின்
மீது அந்தத்
கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு
சற்று நேரம் அப்படியே படுத்திருக்க
வேண்டும். இப்போது கண் எரிச்சல்,
குறைவதோடு, சிவந்த நிறமும்
மறைந்து விடும்.
இதை இரவு நேரங்களில்
தூங்குவதற்குமுன் செய்து வந்தால்
நல்ல உறக்கம் வருவதோடு,
உடலுக்கு பல நன்மைகளும்
கிடைக்கும். நன்றாக சதைப்பற்றுள்ள
கற்றாழை மடல்களைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த
சதை பகுதியை சிறுசிறு துண்டுகளாக
வெட்டி கொள்ள வேண்டும். இந்த
துண்டுகளைப் பலமுறை தண்ணீர்
விட்டு கழுவவேண்டும். அவற்றின்
வழுவழுப்புத் தன்மையும் நாற்றமும்
அகலும் வரை கழுவி சுத்தம் செய்ய
வேண்டியது முக்கியம்.
வாய் அகன்ற பாத்திரம்
ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம்
செய்து வைத்திருக்கும் கற்றாழைத்
துண்டுகளைப்
போட்டு பனங்கற்கண்டு அரை கிலோ,
வெள்ளை வெங்காயம் கால்
கிலோ ஆமணக்கு என்ணெய்
ஆகியவற்றை சேகரித்து கொள்ள
வேண்டும். வெங்காயத்தை மட்டும்
இடித்து சாறு எடுத்து மற்ற
பொருட்களோடு கலந்து
அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக
எரிக்க வேண்டும்.
சாறு சுண்டி சடசடப்பு அடங்கும்
வரை வைத்திருந்து பிறகு இறக்கி
சூடு ஆறிய
பிறகு கண்ணாடி ஜாடியொன்றில்
பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள
வேண்டும். வயிற்றில் ரணம், மாந்தம்,
வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல்,
மற்றும் உஷ்ண வாயு தொடர்பான
பிணிகள் தோன்றினால்
வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம்
காலை,மாலை,கொடுத்து வர நல்ல
முறையில் குணம் தெரியும்.
கற்றாழை உடல் முதல் உள்ளம்
வரை அனைத்தையும்
குணப்படுத்தும் சிறந்த மருந்து

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு