Skip to main content

கொய்யா

கொய்யா

கொய்யாப்பழத்தில்
ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப்
பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல
இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக்
கடித்துச் சாப்பிடுவதால், பற்களும்
ஈறுகளும் பலம் பெறுகின்றன.
கொய்யாப் பழத்தால் குடல், வயிறு,
ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல்
ஆகியவை வலிமை பெறுகின்றன.
உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.
இரவு உணவுக்குப் பின் நன்றாகக்
கனிந்த கொய்யாப்
பழங்களை சாப்பிட்டால்
மலச்சிக்கலே இருக்காது.
பல்முளைக்கும்
குழந்தைகளுக்கு கொய்யாப்
பழங்களை தினமும் கொடுத்தால்
பற்கள், ஈறுகள் உறுதியாகும்.
கொய்யா மரத்தின் வேர்,இலைகள்,
பட்டை,களில் மருத்துவகுணங்கள்
அடங்கியுள்ளன. குடல்,
வயிறு பேதி போன்ற
உபாதைகளுக்கு இவை பெரிதும்
குணமளிக்கின்றது.
கொய்யா மரத்தின்
இலைகளை அரைத்து காயத்தின் மேல்
தடவினால் அவை விரைவில்
ஆறிவிடும். கொய்யா இலைகள்
அல்சர் மற்றும் பல் வலிக்கும்
உதவுகின்றன.
கொய்யாவுக்கு சர்க்கரையைக்
குறைக்கும் தன்மையுண்டு.
கொய்யாக்
காய்களை தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் இரத்தத்திலுள்ள
சர்க்கரையின்
அளவு பெருமளவு குறைய
வாய்ப்புகள் இருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.
கொய்யா இலைகள் மூலம்
தயாரிக்கப்படும் கஷாயம் இருமல்
தொண்டை மற்றும் இதய சம்பந்தமான
நோய்களுக்கு தீர்வு தருகின்றன.
கொய்யா மரத்தின் இளம்
புதுக்கிளைகளின் மூலம்
தயாரிக்கப்படும் கஷாயம்
காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா மரத்தின்
கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும்
மற்றொரு கஷாயம்
குழந்தைகளுக்கு வரும் மாந்தம்,
இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற
வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Comments

  1. Borgata Hotel & Casino - Dr.MCD
    Borgata Hotel 동해 출장샵 & Casino is the official gateway to Borgata 안전한 바카라 사이트 in Atlantic City. With more than 충청북도 출장마사지 100 gaming tables, multiple bars and lounges, this resort has 원주 출장마사지 something 전라북도 출장안마

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு