சுகப் பிரசவம் நடந்திட உதவும்
அதிமதுரம்..!
• அதிமதுரம், சீரகம் சம
அளவு எடுத்து பொடித்து வைத்துக்
கொண்டு 20 கிராம் பொடியை 200
மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க
வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும்
வடிகட்டி காலை வேளையில்
மூன்று தினங்கள் சாப்பிட்டால்
கருவுற்ற
பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக
உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப்
போக்கு நிவர்த்தியாகும்.
• அதிமதுரம், தேவதாரம் இவைகள்
வகைக்கு 35 கிராம் பொடி செய்து,
பிறகு வெந்நீர் விட்டு நன்றாக
அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன்
இரண்டு முறை கொடுத்தால்
சுகப்பிரசவம் ஏற்படும்.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத்
தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்.
ஆரோக்கியமான பெண்களின்
மலட்டுத்தன்மை நீங்கும்.
• போதுமான அளவு தாய்ப்பால்
இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச்
சூரணத்தைப் பாலில்
கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால்
அதிகமாகச் சுரக்கும்.
• அதிமதுரம்,
திராட்சை இவை இரண்டையும்
சமமாகப் பொடி செய்து 50
அல்லது 100 கிராம்
எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில்
கலக்கி பெண்களின் மாதவிடாய்
தொடங்கிய நாள் முதல்
ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால்,
ஆரோக்கியமான பெண்களுக்குக்
கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2
முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டால்
நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment