இனிய கனியான ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்கள்இயற்கையில் விளையும் கனிகளில் ஆஞ்சுப்பழத்தின் உன்னத குணங்கள் அளவிட முடியாது. விளம்பர மோகத்தால், தவறான உணவுக் கொள்கையால் நாம் ஆற்றல் தரும் ஆரஞ்சின் நன்மையை அறியாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இராசயண பானங்களுக்கு அடிமையாகி நோயில் வீழ்ந்து தினம் கஷ்டப்படுகிறோம். ஆரஞ்சு பழத்தின் பெருமையை இனியேனும் அறிவோம். நோயின்றி நலமுடன் வாழும் வழி அறிவோம்.ஆரஞ்சுப் பழச் சத்துக்கள் விவரம்நீர்ச்சத்து 86.5% புரதம் 0.6% சர்க்கரை 12.0% கொழுப்பு 0.1% மற்றும் விட்டமின் “ஏ” 120 மி.கி,விட்டமின் “பி” 68மி.கி., விட்டமின் “சி” 19 கிராம், சுண்ணாம்புச் சத்து 14 மி.கி., பொட்டாசியம், கால்சியம், கந்தகம், மக்னீசியம் போன்ற உப்புச் சத்துக்களும் அடங்கியுள்ளன.ஆரஞ்சுப்பழம் புசிப்பதற்கு ருசியாகவும், போஷாக்கும் உள்ளது. உடனடி தெம்பு தருவது நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம். காபி மற்றும் குளிர் பானங்களுக்குப் பதில் ஆரஞ்சு சாறு சாப்பிட்டு அதன் பலனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும்.சாப்பிடும் முறைமேல் தோலை உரித்து சுளை எடுத்து சாப்பிடலாம். வெண்மை நிற உள் தோலைச் சேர்த்து சாப்பிட்டால் சுண்ணாம்புச்சத்தும் நார்ச்சத்தும் அதிக அளவில் கிடைக்கும். சாறு எடுத்து சாப்பிடுகிறவர்கள் சுவைக்கு வெள்ளைச்சீனி சேர்க்காமல் தேன்,வெல்லம், பேரீச்சைச்சாறு சேர்க்கலாம். சிறுவர்களுக்கு மிகவும் பிரியமான உணவு.குணமடையும் வியாதிகள்சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதிகளால் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம். மேலும் உடல் சூடு, கண் பார்வை கோளாறு, சளித்தொல்லை இவை அனைத்தும் சேர்ந்த வியாதி உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்ற ஒரே பழம் ஆரஞ்சுப்பழம்.குடல்புண் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் அற்புத உணவு, செரிக்கும் சக்தியையும், பசியையும் அதிகப்படுத்துவதுடன் நொந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களை புதுப்பிக்கிறது.இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது. பல் வலி, பயரியா போன்ற கோளாறுகளைத்தீர்க்கும் அதிசய உணவு. உடல் சூடு, வெட்டைச்சூடு, மூலவியாதி போன்றவற்றிற்கும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் உடன் அற்புத பலன் கிட்டும். உடம்பில் மிகுந்துள்ள விஷத்தன்மையை முறித்து காய்ச்சலிலிருந்து உடனே நிவாரணம் தருகிறது. உடல் எடை, மூட்டுவலி, உடம்பில் அதிக உப்புச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சஞ்சீவி கனியாக செய்ல்படுகிறது.கர்ப்பமுற்ற பெண்கள் இப்படிச்சாற்றை அதிக அளவல்¢ல் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள்.வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது. குழந்தைகளின் பிரைமரி காம்ளக்ஸ் சரியாகிறது.இயற்கை மருத்துவம் – நடைமுறையிலுள்ள சாறுகள் சில1. அருகம்புல் சாறு. 2. பூசணிச்சாறு. 3. வாழத்தண்டு சாறு. 4. மணத்தக்காளி இலை சாறு. 5.கேரட் சாறு. 6. வில்வ இலைச்சாறு. 7. நெல்லிச்சாறு. 8. பழங்களின் சாறுகள். 9. இளநீர். 10. தர்ப்பூசணிச்சாறு.சாறு உண்ணுதல்: கனிச்சாறு, காய்ச்சாறு, இலைச்சாறு உண்ணுகையில் வெறும் சாறாக இன்றிதண்ணீருடன் கலந்தே உண்ணுதல் வேண்டும். ஒரு டம்ளர் சாறு உண்ண 15 நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்
Comments
Post a Comment