Skip to main content

குங்குமப்பூ

மிகப்பழமையான விலையுயர்ந்த நற்மணப்பொருட்களில் குங்குமப்பூவும் ஒன்று. இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூஞ்சோலைகளுக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள பாம்போர் என்ற பகுதியில் ஏறக்குறைய 3350 ஏக்கர் பரப்பளவில் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஜம்முவிலும் சிலபகுதிகளில் பயிராகிறது. நமதுநாட்டின் தேவைக்கு ஸ்பெயின் நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.சீனாவிலும் இந்தியாவிலும் 2000 வருடங்களுக்கும் மேலாக மருந்தாகவும் வாசனையூட்டும் உணவுக்கலப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அக்காலத்தில் சீனா முதலிய நாடுகளுக்கு பயணித்த ஒருவர் தன்கைத்தடியின் உட்பகுதியில் இதன் நாற்றை மறைத்துக் கொண்டுவந்து அதனை சாப்ரான் வால்டன் என்ற பகுதியில் பயிரிட்டார். அதனால் இதன் பெயர் சாப்ரான் என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது. சுமார் 60,000 செடிகளிலிருந்து எடுக்கப்படும் சூல்முடிகள் பக்குவப்படுத்தப்பட்டு அரைக்கிலோ அளவு! குங்குமப்பூ கிடைக்கிறது. இதனைச் சேகரிக்கவும் பக்குவப்படுத்தவும் நிறைய மனித உழைப்புத் தேவைப்படுகிறது. தேவையும் அதிகமிருப்பதால் விலையும் அதிகம். எனவே நம்பிக்கையானவர்களிடம் வாங்க வேண்டும். முதல்தரப்பூ சாகி, என்றும் இரண்டாம்தரப்பூ மோக்ரா என்றும் மூன்றாம்தரப் பூ லாச்சாஎன்றும் அழைக்கப்படுகின்றன.ரோமானியர்கள் குளிக்கும் நீரில் கலந்து உடல் அழகுக்காகக்குளித்தார்கள். மதுவில் மணத்துக்காகவும் உடல்நலத்துக்காகவும் கலக்கிப் பருகினார்கள். பொதுவாக இது குழந்தைகளின் உடல்நலத்துக்காகவும், பெண்களின் கருப்பைக் கோளாறுகளுக்காகவும், ஆண்களின் வீரியத்துக்கும், நுரையீரல் சார்பான நோய்களுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது. தமிழ் மருத்துவத்தில் தும்மல், சளி, தலைவலி, இருமல், மூச்சுக்கோளாறுகள், இவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகும். அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தும். அழகைக்கூட்டுவதற்கான முகப்பூச்சுக்களிலும், தாது உட்டமளிக்கும் மருந்தாகவும், பலவித எண்ணைகளிலும் இதைச் சேர்க்கிறார்கள். தாது நாட்டம், நாவறட்சி, குடல்வாதம், மேகநீர்ம் கீல் பிடிப்பு, கபாதிக்கம், அதிகச்சுரம், பயித்தியம், வாதம், மண்டைவலி, கருவிழியில் வரும் பூ, வாந்தி, நீர்வடியும் காதுமந்தம், வாயினிப்பு, பிரசவத்திற்குப் பின் ஏற்படும் நலக்குறைவு இவை குங்குமப்பூவால் தீரும்.கருவுற்ற பெண்கள், பால் அல்லது தாம்பூலத்துடன், 50 முதல் 100 மில்லிகிராம் அளவு சேர்த்து உண்டுவருவதால் தாய்க்கும் குழந்தைக்கும் சீதளம் தொடர்புடைய நோய்கள் அண்டாது. குழந்தை நல்ல சிறப்பான உடல்நலத்துடன் இருக்கும். குழந்தை சிவப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையே. ஆனால் வளமான சந்ததி உருவாகும். பிரசவம் தாமதிக்கும்போது சோம்புக் கசாயம் வைத்து அதில் 2 கிராம் அளவு பூவை அரைத்துப்போட்டு குடிப்பதால் எளிதில் பிரசவமாகும். 200 மில்லிகிராம் அளவு பூவை வெற்றிலையில் மடித்து 3 வேளையும் உணவுக்குப்பின் மென்று விழுங்கினால் பிரசவித்த பெண்களின் உதிரச் சிக்கல் வெளியாகும்.ஆண்களுக்கு சளி, அலுப்பு, சோர்வுநீங்கி உற்சாகமேற்படும். வாய்மணக்கும். வசதியிருப்பவர்கள் பலவிதமான உணவுப்பண்டங்களில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றல் வளரும் உடலும் மனமும் மற்றும் முகமும் பொலிவுடன் விளங்கும்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு