கற்பூரவல்லி
கற்பூரவல்லி (Coleus aromaticus)
இது ஓர் அற்புதமான மூலிகை செடி.
இதன் தாயகம் இந்தியாதான். இதன்
தண்டும், இலைகளும்
பயன்தரக்கூடியவை. இதன்
வேறு பெயர்கள் - ஓமவல்லி,
ஒதப்பன்னா, பாசானபேதி,
கண்டிரி போரேஜ்.
வாசனை மிக்கதான இச்செடியின்
தண்டு முள்போல நீண்ட மயிர்த்
தூவிகளைக் கொண்டிருக்கும். இதன்
இலைகள் தடிப்பாகவும்
மெதுமெதுப்பாகவும் இருக்கும்.
கசப்புச் சுவையும் காரத்தன்மையும்
வாசனையும் இதன் இலை மருத்துவ
குணம் கொண்டது.
எப்படி சாப்பிடலாம்?
கற்பூரவல்லி இலைகளை தேங்காய்,
பருப்பு, மிளகாய், கொத்தமல்லி,
கறிவேப்பிலை சேர்த்து சட்னியாக
செய்து சாப்பிடலாம்.
இதன் இலைகளை நன்கு கழுவி,
கடலை மாவு சேர்த்து, பஜ்ஜி,
பகோடா செய்து சாப்பிடலாம்.
என்ன பலன்கள்?
கற்பூரவல்லி தாவரத்தின்
பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம்
போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
இலைச்சாறு, நல்லெண்ணெய்,
சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்ற
பற்றுப் போடத்
தலைவலி நீங்கும்.சூட்டைத்
தணிக்கும்.
இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண
வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ
குணத்தைப் பெற்றிருக்கிறது.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்,
இளைப்பு நோய்களுக்கு உள்
மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன்
சாறு மேல் பூச்சாக தடவ குணம்
தரும்.
உடலின் சளி நீங்க
இலைகளை அரைத்து நீர்கலந்து கொதி
வைத்து ஏலக்காய்,
கிராம்பு (சிறிதளவு) மற்றும்
ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து 3
நாட்களுக்கு தினசரி 2
வேளை பருகி வரவும்.
கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்
Comments
Post a Comment