Skip to main content

மகிழ்ச்சி தரும் மகிழம்பூ

பழமை வாய்ந்த அம்மன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் மற்றும் இதன் அருமை தெரிந்தவர்கள் வீட்டிலும் வளர்க்கப்படும் சிறப்புப் பெற்ற மரம் மகிழம்பூ மரம். அவ்வளவு ஏன், இந்தத் தொடரைப் படித்து இதன் அருமை தெரிந்தவுடன் நீங்களே உங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். இந்தமரம் பொதுவாக காண்பதற்கரிதாகவே இருக்கிறது. கண்டிப்பாக வளர்த்து பயன் பெறவேண்டிய மரம்.மனதுக்கு இதமான மணம்வீசும் மலர்களில் மகிழம்பூ மிகச்சிறந்தது. மகிழ் என்றால் “மகிழ்ச்சியாக இரு” என்று பொருள். இந்தமல்ர் இன்பத்தையும்மகிழ்ச்சியையும் தருவதால் சித்தர்கள் இதனை மகிழம்பூ என்றழைத்திருக்கிறார்கள்.கைப்பிடி மகிழம்பூவை 2 கோப்பை தண்ணீரில் கொதிக்கவைத்து, சரிபாதியாகச் சுருக்கி வடித்து,காலை மாலை நேரங்களில் குடித்து வந்தால் உடலில் சூடு தணிந்து வலிமை பெற்று விளங்கும். மூன்று கைப்பிடிப் பூவை இதேபோல் வைத்துவடித்து, பால் சர்க்கரை சேர்த்து இரவு உணவுக்குப்பின் ஆண்கள் பருகினால் இல்லற இன்பம் கூடும். நல்ல திறனுண்டாகி உடலுறவுக்குப்பின் ஆயாசமும் களைப்பும் வராமல் தடுக்கும். பித்தம் சமன்படும்.பூக்களை உலர்த்தி மெல்லிய பொடியாக்கி மூக்கில் பொடிபோடுவதுபோல் உறிஞ்சுவதால், மூக்கில் நிறைய நீர்வடிந்து நாற்றமடிக்கும் மண்டைப்பீனிசம்(Sinusitis), அது தொடர்பான தலைவலி மற்றும் வாயில் சுவையின்மை போன்றவை நீங்கி குணமாகும்.இதன் விதைப்பருப்பைச் சேகரித்துப் பொடியாக்கி வேளைக்கு 3 கிராம் அளவு காலை மற்றும் மாலை நேரங்களில் பாலுடன் அருந்திவர தாது வளர்ச்சிபெறும். உடல் சூடு, நச்சு, மலச்சிக்கல் நீங்கும். ஒரு தேக்கரண்டி விதைப்பொடியை நெய்கலந்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் கொடுத்தால் குடல்திறனிழந்து மலச்சிக்கலால் அவதிப்படும் வயதானவர்களின் தொல்லை நீங்கும். குடல் வலிமை பெறும். தேவைப்பட்டால் இரண்டு தேக்கரண்டிவரை சாப்பிடலாம். விதைகளை வெந்நீர் விட்டரைத்து நெல்லிக்காயளவு சாப்பிடுவதால் பாம்புக்கடி நச்சு முறியும்.நாள்தோறும் காலை பல்துலக்கியதும் இளம் மகிழங்காய்களை மென்று சிறிது நேரம் கழித்து துப்பினால் பற்கள் இறுகி உறுதிப்படும். இதன் இலைகளைக் கசாயம் வைத்துப் பல்துலக்கியதும் வாய் கொப்பளித்துவந்தால் பல்நோய்கள்தீரும். இந்த மரப் பட்டையைக் கசாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். பற்கள் வலிமை பெறும். ஏ.வி.எம் முலிகை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிமையம் தயாரிக்கும் வசீகரா பற்பொடியில் இது சேர்க்கப்பட்டுள்ளது.6 கிராம் அளவு பட்டையைச் சிதைத்து 250 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் கொதிக்கவைத்து 50 மில்லி லிட்டர் அளவு சுருக்கி வடிகட்டி தேன் 1 தேக்கரண்டி கலந்து காலை மற்றும்மாலை நேரங்களில் குடிப்பதால் பெண்களின் உடல் வலிமைக்குறைவு மற்றும் கருப்பை வலிமைக்குறைவு நீங்கிக் குழந்தைப் பேறு உண்டாகும்.சித்த மருத்துவர்கள் வெள்ளியைச் சாம்பலாக்க (பஸ்பம்) இதன் பூப்புக்கும் காலத்தில் சேர்த்து மருந்து முடிப்பார்கள்.தாதுவைநன் மெய்யழகைச்சக்தியைஉண் டக்கிவிடுஞ்சீதளமென் பார்க்கலிக்கஞ்செய்மருந்தாம் – வாதைமலத்தைவிழித் தோடத்தைவல்விடத்தை வெப்பைவிலக்கு மகிழம் விதைஉடலுக்கும் குடலுக்கும் வலிமை தந்து ஆண்-பெண் இருவருக்கும் குழந்தைப் பேறுக்குத் திறனளிக்கும் மகிழம்பூ மரத்தை நாமும் வளர்த்துப் பயனடைவோம்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு