Skip to main content

கவலை தீர்க்கும் கடுக்காய்

துவர்ப்புச் சுவை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, கார்ப்பு மற்றும் கசப்பு சுவைகள் குறைவாகவும் இயற்கையாகவே ஐம்பெரும் பூதங்களின் ஒருங்கிணைப்பாய்க் காணப்படும் கடுக்க்காயானது வாத, பித்த மற்றும் கப மாறுதல்களினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும்.Terminalia Chebula என்பது கடுக்காயின் தாவரவியல் பெயர். அகத்திய முனிவர் இதனைத் தாயினும் மேலானதாகப் புகழ்ந்து பாடியிருக்கிறார்.கடுக்காயும் தாயும்கருதிலொன்றென்றாலும்கடுக்காயைத் தாய்க்கதிகங்காண்நீ – கடுக்காய்நோய்ஓட்டி உடற்தேற்றும்உற்ற வன்னையோ சுவைகள்ஊட்டி உடற்தேற்று முவந்துவடமொழி நூல்கள் பலவற்றில் கடுக்காயின் இன்றியமைமாக்காக தேவேந்திரன் அமுதத்தை அருந்தும்போது ஒருதுளி புவியில் சிந்தி அது கடுக்காய்மரமாக வளர்ந்ததாகவும், பதினான்கு வகை இரத்தினங்களில் கடுக்காயும் ஒன்றாகக் கருதப்படுவதாவும் கூறப்பட்டுள்ளது.புவியிலுள்ள அனைத்திலும் நல்லது கெட்டது இரண்டும் கலந்தேஇருப்பதுபோல் கடுக்காயிலும் நச்சு உள்ளது. எப்படி சுக்கு, இஞ்சி ஆகியவற்றின் தோலைநீக்கிவிட்டு உட்புறத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமோ அதுபோல கடுக்காயின் உற்புறமுள்ள கொட்டைப்பகுதியை நீக்கிவிட்டு அதன் தோலை மட்டுமேபயன்படுத்தவேண்டும்.கடுக்காயில் கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய் மற்றும் பால்கடுக்காய் என்று நான்குவகைகள் உண்டு. இவை நான்கும் உடலை அழிவிலிருந்து காக்கும் கற்ப மூலிகைகளாகக் கருதப்படுகின்றன. இமயமலைப்பகுதிகளில் தவத்திலிருக்கும் தவ முனிவர்கள் இவற்றைத் தேடி உண்பதாகக் கூறப்படுகிறது. தேவ மருத்துவராகக் கருதப்பட்ட தன்வந்திரி பகவான் தம்மிடம் எப்போது கடுக்காய் வைத்திருந்தார்.கொட்டை நீக்கிய கடுக்காய் 10 கிராம் அளவு எடுத்து 2 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து 1/2 குவளை அளவு சுருக்கி வடித்துச் சாப்பிடுவதால் அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். புண்களைக் கழுவ புண்கள் ஆறும். வாயிலுள்ள புண்களுக்கு கொப்பளித்தால் ஆறும்.மென்மையான பொடியாக்கி 2 கிராம் அளவு எடுத்து 1/2 குவளை வெந்நீருடன் கலந்து இரவு படுக்கும்போது குடித்தால் மலச்சிக்கல் நீங்கி காலையில் முறையாகக் கழியும். பொடியைப் பல்துலக்குவதால் ஈறுவலி, ஈறுகளில் உதிரம் வடிதல் பல் ஆட்டம் வாய்ப்புண் தீரும்.அடிபட்ட காயத்தில் உடனே பொடியை வைத்தால் உதிரப்போக்கும் நிற்கும் விரைவில் காயம் ஆறி நலம்பெறலாம். மூக்கில் உதிரம் வடியும்போது இப்பொடியை சிறிதளவு உறிஞ்சினால் உதிரம் வடிவது நிற்கும்.கபநோய் தன்னளவில் அதிகமாகக் கூடிய சனவரி மாதத்தின் நடுவில் இருந்து மார்ச் மாத நடுவரை இதனுடன் சம அளவு திப்பிலிப்பொடிகலந்து 1 கிராம் அளவு காலை மாலை தேனுடன் சாப்பிட்டால் கபம் இருமல் கட்டுப்படும்.கபம் குறைந்து வற்றிப்போகும் நாட்களான மார்ச் மாதத்தின் நடுவிலிருந்து மே மாதத்தின் நடுவரை தனியாக 1/2 கிராம் அளவு பால் அல்லது நெய்கலந்து சாப்பிடகபம் சரிநிலையடைந்து உடல் நலம்பெறும்.வாதம் நிலைமாறும் மேமாதத்தின் நடுவிலிருந்து சூலை மாத நடுவரை வெல்லம் 2 பங்கு சேர்த்து இடித்து வைத்துக்கொண்டு காலை மாலை சிறு நெல்லிக்காயளவு சாப்பிட வாதம் தொடர்பிலான நோய்கள் வராது.சூலை மாதத்தின் நடுவிலிருந்து செப்டம்பர் நடுவரை பித்தம் இயற்கையாகவே கூடும் நாட்களாகும். அந்த நாட்களில் வறுத்துப் பொடித்த உப்பு அல்லதுபுடமிடப்பட்ட உப்பு பற்பம் கலந்த தண்ணீருடன் சாப்பிட்டால் பித்த நோய்கள் வராமல் காக்கும்.இவ்வாறு முழு நாட்களும் சாப்பிடச் சூழ்நிலையில்லாதவர்கள் குறைந்தது அக்காலங்களில் 15 நாட்களாவது சாப்பிட பலன் கிடைக்கும்.காலையில் இஞ்சிகடும்பகல் சுக்குமாலையில் கடுக்காய்மண்டலம் கொண்டால்கோலை ஊன்றிக்குறுகி நடந்தோரும்கோலை வீசிக் குலாவி நடப்போரே!என்ற தேரையரின் வாக்குப்படி காலை வெறும் வயிற்றில் இஞ்சியைத் தோல்சீவித் தட்டிப் பிழிந்து, தெளியவைத்த மேல்சாறுமட்டும் 1 தேக்கரண்டி எடுத்து சமயளவு தேன்கலந்து சாப்பிட்டு, இடைவேளையில் தூய்மையாக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட சுக்குப்பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து உணவுடன் நெய்சேர்த்துச் சாப்பிட்டு இரவு கடுக்காய்ப் பொடி 1 கிராம் அளவு தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் கொழுத்த மற்றும் நலக்குறைவுடைய உடலும் தெம்பும் சுறுசுறுப்பும் அடையும்.முன் சொன்ன நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் முறைப்படி கலந்த மருந்துக்கு திரிபலா சூரணம் என்ற பெயர். இந்தச் சூரணத்தை முறைப்படி சாப்பிடுவதால் வாயுத்தொல்லை, உணவுசெரிக்காத தொல்லை, மலச்சிக்கல், உடற்சூடு, மூல எரிச்சல், வயிற்றுப்புண், உதிரக்குறைவு, வெண்குட்டம், கண் நரம்பு நலக்குறைவு ஆகிய நோய்கள்தீரும். சர்க்கரை நோய் தீரும். தொப்பை குறையும். மேற்கண்ட தயாரிப்புகள் வேண்டியவர்கள் நமது ஆராய்ச்சிமையத்துக்குத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு