Skip to main content

நீண்ட வாழ்வளிக்கும் கரிசலங்கன்னி

சித்த மருத்துவத்தை ஓர் உயிருள்ள மருத்துவம் என்று கூறமுடியும். பெரும்பாலும் அரியமூலிகைகளின் உதவியுடனே சித்த மருத்துவ மருந்துகள் ஆக்கப்படுகின்றன. மனிதர்களில் ஞானிகள் எப்படி பிறரின் மனக்குறைகளை நீக்க உதவுகிறார்களோ அதுபோலவே தாவரங்கள் வகை உயிரினங்கள் பிற உயிரிகளின் உடற்கோளாறுகளை நீக்க உதவுகின்றன.நம் நாடு எப்படி சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறதோ அதுபோலவே, பல அரிய மூலிகைகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறது. அதனால்தான் சித்தர்களுக்கும் மூலிகைகளுக்கும் அவ்வளவு இணக்கமான உறவுள்ளது. அத்தகைய வியத்தகு மூலிகைகளைப் பற்றித்தான் பனித்துளிகள் தளத்தில் இந்த நெடுந்தொடர் வெளிவருகிறது. பிருங்கராஜா என்றும் தேகராஜா என்றும் வடமொழிச்சொற்களால் சித்தர்கள் கரிசலாங்கண்ணியை அழைத்தார்கள். உண்மையில் இது மூலிகைகளின் மன்னன் தான். இது கரிசாலை என்றும் அழைக்கப்படுவதுண்டு.அண்மையில் நமது தமிழ்மண்ணில் உதித்த அருட்பிரகாச வள்ளல் பெருமான், முதல் நிலையில் வைத்துப் பாராட்டியுள்ள ஒரு மிகச்சிறப்பான மூலிகைதான் கரிசாலை.கரிசாலையைப் பச்சையாகவோ அல்லது சமைத்தோ நாள்தோறும் உட்கொள்பவர்களது உடல் நலம்மிகுந்து வாழ்நாட்களை நீட்டிக்கவல்லது. முதன்மை உள்ளுடம்பாகிய சூக்குமதேகம் வலுப்பெற்று உடல் அழியாநிலை பெறும். முகம் பொலிவு பெறும்.கரிசாலையைப் பச்சையாக மென்று பல்துலக்கி அந்த சாற்றைப் பெருவிரலால் தொட்டு மேலண்ணத்திலுள்ள மூச்சுப்பாதையில் சுழற்றினால் பித்தநீர், கபநீர் வெளியேறி அந்தப் பாதை தூய்மையடைகிறது. இதனால் எளிதாக மூச்சுவிடும் திறன்பெறும்.கண் ஒளி சிறக்கும். வெள்ளைப்பூ பூக்கும் இந்தக் கரிசாலை கிடைக்காதபோது மஞ்சள் பூப்பூக்கும் பொற்றலைக் கையாந்தகரை என்னும் மஞ்சள்க் கரிசாலையினை பயன்படுத்தலாம்.நல்ல நீர்வளமுள்ள இடங்களான ஆற்றங்கரை, வாய்க்கால் கரைகளில்செழித்துவளரக்கூடியவை இவை. மஞ்சள் கரிசாலையில் தங்கச் சத்து உள்ளது. வெள்ளைக் கரிசாலையில் இரும்புச் சத்து உள்ளது. உதிரத்தைத் தூய்மையாக்கும். கல்லீரல் மண்ணீரலை வலிமைப்படுத்தும்.புதிய ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு கரிசாலையிலுள்ள சத்துக்கள் பின்வருமாறு அளக்கப்பட்டுள்ளன.புரோட்டீன் எனப்படும் புரதம்4.4 கிராம்தாதுப்பொருட்கள்4.5 கிராம்இரும்புச்சத்து8.9 கிராம்கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து9.2 கிராம்கொழுப்பு0.8 கிராம்கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச்சத்து306 மில்லி கிராம்பாஸ்பரஸ்462 மில்லி கிராம்கிடைக்கும் வெப்ப ஆற்றலின் அளவு62 கலோரிகரிசலாங்கண்ணி கீழாநெல்லியுடன்சேர்த்துச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய்க்கு அருமையான மருந்தாகும். சிறுநீர்த்தடை, எரிச்சல் முதலானவையும் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும்நீக்கி நலம்பெற வைக்க வல்ல மருந்தாக கரிசாலை பயன்படுகிறது.கை,கால் வீக்கம் மற்றும் பாதத்தில் உண்டாகும் வீக்கம் முதலானவை குறையும்.எனவே கரிசாலையினைச் சமைத்து உண்டு உடலில் இரும்புபோன்ற உறுதியையும், தங்கம் போன்ற மினுமினுப்பையும் பெறுங்கள்.தொடரும்…

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு